tamilnadu

img

வேலை தருவதாக கூறி மோசடி நெல்லை முத்து விலாஸ் நிர்வாக இயக்குநர் கைது

கோவை, மே 16-கோவையில் வேலை தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 35 லட்சம் ரூபாய்பணம் பெற்றுக்கொண்டு மோசடிசெய்ததாக நெல்லை முத்து விலாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டார்.கோவையில் பல்வேறு இடங்களில் நெல்லை முத்து விலாஸ் என்ற பெயரில் இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகிறது. இக்கடையின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் பாலசந்திரன். இவர் தங்களதுகிளை நிறுவனங்களில் பணிபுரியஆட்கள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததைதொடர்ந்து ஓய்வு பெற்ற அரசுஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்குந் சென்றுள்ளனர். நேர்காணலுக்கு சென்றவர்களிடம் வேலைக்கு அமர்த்துவதாகக் கூறி தலா ரூ.30 ஆயிரம்வீதம் 35 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாலச்சந்திரனிடம்பணத்தை திருப்பி கேட்ட போது,தன்னை மிரட்டுவதாக பாலச்சந்திரன்வழக்கு தொடுத்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நெல்லை முத்துவிலாஸ் மிட்டாய்கடை உரிமையாளர் பாலசந்திரனை கைது செய்தனர்.இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.