tamilnadu

img

நீரோடையை ஆக்கிரமித்த புதர்கள் சாலையில் பெருக்கெடுத்தொடும் வெள்ளம்

உதகை, அக்.18- கேத்தி அருகே நீரோடை முழுவதும் செடி, கொடி கள் படந்து புதர் மண்டிக்கிடப்பதால் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் பெருக்கெடுத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட சாந்தூர் கொம்புகரை  கிராமம். இங்கு  நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் நடை பாதையை ஒட்டி ஓடை செல்கிறது. சுமார் 15 அடி அகலமுள்ள இந்த ஓடையில் மழை பெய்யும் போது சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரண்டு வரும் பெரும் வெள்ளம் முழுவதும் இந்த ஓடையின் வழியாகவே செல்கிறது.  இந்நிலையில் இந்த ஓடை முழுவதும் தற்போது செடி, கொடிகள் முளைத்தும், மண் மூடியும் காணப்படுகிறது. இதனால் வெள்ள நீர் வழிந்தோட வழியின்றி அவ்வப்போது நடைப்பாதையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் சில நேரங்களில் மீண்டும் தங்களின் வீடுகளுக்கே திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து அப்பகுதியினரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், இப் பிரச்சனை தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று மனு கொடுத்து சந்தித்தோம். அப்போது, ஆட்சியர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை யாரும் வரவில்லை. அகவே, இந்த ஓடையை முழுமையாக தூர்வாரிடவும், நடை பாதையை சாலையாக  மாற்றிடவும் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.