tamilnadu

img

சாக்கடை கால்வாய் அடைப்பை அகற்ற பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியில் ஈடுப்பட்ட பெண் தொழிலாளர்கள்

வீரகனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம்

சேலம், நவ.12- வீரகனூர் பேரூராட்சியில் எவ் வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடை கால்வாயை தூய்மைப்படுத்தும் பணியில் பெண் துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  சேலம் மாவட்டம், கெங்க வல்லி தாலுகா, வீரகனூர் பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்பரவு பணிகள் மேற்கொள் வதற்கு குறைவான பணியாளர் களே உள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் சாக்கடை கால் வாய்களில் ஆங்காங்கே குப்பை களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்ப தால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றது. இந்நிலை யில் வீரகனூர் பேரூராட்சி 14 ஆவது வார்டு சொக்கனூர் பகுதி யில் சாக்கடை கால்வாயில் மண்  மற்றும் குப்பை உள்ளிட்ட கழிவு களால் அடைப்பு ஏற்பட்டது. இத னால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கால் வாயை தூர்வார பெண் துப்பரவு  தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதேநேரம், இத்தொழி லாளர்களுக்கு எவ்வித பாது காப்பு உபகரணங்களும் வழங்கப் படவில்லை. இதனால் சாக்கடை  கால்வாயை எவ்வித உபகர ணங்கள் இன்றி வெறும் கை களால் தூர்வாரும் பணியை பெண்  தொழிலாளர்கள் மேற்கொண் டனர்.     இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது, சுகாதார சீர்கேட்டால் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி  வருகிறது. இந்நிலையில் இப் பகுதியில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனை அகற்று மாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து பேரூ ராட்சி நிர்வாகம் சாக்கடை கால் வாயை தூர்வார பெண் தொழிலா ளர்களை ஈடுபடுத்தியுள்ளது.  அதேநேரம், இத்தொழிலாளர் களுக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்களும் வழங்கவில்லை.  இதுகுறித்து தேசிய மனித உரிமை  ஆணையத்திற்கும், தேசிய ஆதி திராவிடர் நல ஆணையத்திற்கும் புகார் தெரிவிக்க உள்ளதாக தெரி வித்தனர்.