உடுமலை, பிப். 25- தமிழக அரசின் கோழி வளர்ப்பு திட்டத் தில் பெரும் முறைகேடு நடப்பதாக விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டப் பட்டது. உடுமலையில் கோட்டாட்சியர் ரவிக் குமார் தலைமையில் செவ்வாயன்று விவ சாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற் றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசுகையில், ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். அதற்கான செயல் திட் டத்தை உடனடியாக தமிழக அரசு அறி விக்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றும் வகையில் செயல்படும் பயிர் காப்பீட்டு நிறு வனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் பல லட்ச ரூபாய் ஊழல் செய்த நிறுவனங்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதி காரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு ஆண்டு பயிர் காப் பீடு குறித்து வெளிப்படையான அறிக் கையை வேளாண்துறை வெளியிட வேண் டும் என்றனர்.
மேலும், தென்னை மற்றும் மரங்களில் கடுமையாக வெள்ளை ஈ தாக்குதலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி சர்க்கரை ஆலை பராமரிப்பு வேலைக்கு அரசு ஒதுக்கிய நிதி குறைவாக உள்ளது. மேலும் கூடுதல் நிதியை தரவேண்டும். முறையாக பராமரிப்பு வேலையை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு மிக அருகில் பெயரயளவில் நிலத்தை வாங்கி ஆழ்குழாய்கள் அமைத்து பல கிலோ மீட் டர் தூரம் குழாய்கள் மூலம் தண்ணீரை வணிக நோக்கில் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். தற்போது உள்ள ஆயக் கட்டு பகுதியில் இருந்து வேறு ஆயகட்டு நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என்ற விதியை மதிக்காமல் தண் ணீர் கொண்டு செல்வதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்புக்குள்ளா வதை தடுக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக உழவர் சந்தை களுக்கு முறையாக பேருந்துகளை இயக்கு வது இல்லை. இதனால் விவசாயிகள் தங்களின் விளை பொருள்களை கொண்டு வர மிகவும் சிரமப்படுகிறார்கள். கடந்த வருடம் மாம்பழ விவசாயிகள் காப்பீட்டு திட்டம் மூலம் மரம் ஒன்றுக்கு ரூ.1500 வீதம் கட்டினார்கள். ஆனால் தற்போது வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால் அதிக மரங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. உட னடியாக காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.
மக்காசோள பயிரில் படைப்புழு தாக்கு தலை தடுக்க வேளாண்துறையின் மூலம் மருந்துகள் தரப்பட்டது. இம்மருந்துகளை தெளிக்க தர வேண்டிய பணம் இன்னும் குடி மங்கலம் பகுதியில் உள்ள 600க்கும் மேற் பட்ட விசாயிகளுக்கு வழங்காமல் உள்ளதை வழங்க வேளாண்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசின் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் தரம் இல்லாத கோழி குஞ்சுகளை தருகிறார்கள். இதில் வழங்கப்பட்ட பல கோழிகள் சில தினங் களில் இறந்து போகிறது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது சொந்த தொகுதியில் வழங்கப்பட்ட கோழிகளின் தரம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழல் மக்களுக்கு தெரிய வரும். மேலும் அமைச்சர் தொகுதியில் உள்ள கால்நடை தலைமை மருத்துவமனையில் மருத்துவர் இருப்பது இல்லை. போதிய மருந்துகளும் இல்லாமல் அவல நிலையில் உள்ளது என விவசாயிகள் ஆவேசமாகத் தெரிவித்தனர். முன்னதாக, இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கள் எஸ்.ஆர்.மதுசூதனண்,வெ.ரங்கநா தன், ஸ்ரீதர், கண்ணநாயக்கனூர் செல்வ ராஜ், வல்லகுண்டாபுரம் பரமசிவம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.செளந் தர்ராஜன், ஜல்லிபட்டி கோபால் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.