tamilnadu

img

இஎஸ்ஐ மருத்துவமனை- ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை, மார்ச் 12 -   கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களாக  ஊதியம் வழங்கா ததைக் கண்டித்து ஒப்பந்த துப்பு ரவு பணியாளர்கள் மற்றும் பாதுகா வலர்கள் பணிகளை புறக்கணித்து வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சிங்கா நல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ  மருத்துவமனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகா வலர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். பத்மாவதி ஹாஸ்பெட்டல் ஸ்பெசாலிட்டிஸ் மேனெஜ் மென்ட் ஆப் சர்விஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் கீழ் இத்தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இந்நி றுவனத்திற்கான ஒப்பந்த காலம் 2019 டிசம்பர் மாதத்துடன் முடிவ டைந்துள்ளது. இதனைத்தொ டர்ந்து கிரிஸ்ட்டல் என்கிற நிறுவ னம் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இருப்பினும் தற்போதுவரை பத்மாவதி நிறுவனமே பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் மாதம் கிரிஸ்ட்டல் நிறுவனம் தங்களின் கட்டுப்பாட்டில் எடுப்ப தாக அறிவித்துள்ளது.   இந்நிலையில், ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரும் துப்பு ரவு பணியாளர்கள் மற்றும் பாதுகா வலர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள் ளது பத்மாவதி நிறுவனம். இத னால் மருத்துவமனையில் பணிபு ரியும் தூய்மை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத் திற்கு சிஐடியு மாவட்ட தலைவர்  சி.பத்மநாபன், பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் நிர்வாகி கள் கே.மனோகரன், கே.ரத்தின குமார், தெய்வேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், எங்கள் உழைப்பு இவர்களுக்கு இலவசமாக தேவைப்படுகிறது. நிறுவனம் மாறுகிறது என்பதால் இரண்டு மாதம் ஊதியம் தராமல் இழுத்த டிக்கிறார்கள். நிலுவை ஊதி யத்தை வழங்க வேண்டும், கூடு தல் பணி நேர ஊதியம், வார விடு முறை உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பதால் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த னர். இதனையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர்  நிர்மலா மற்றும் இருப்பிட மருத்துவ அதிகாரி, மருத்துவ மனைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பத்மா வதி தனியார் நிறுவனம் மற்றும்  சிஐடியு தொழிற்சங்க தலைவர் கள், தொழிலாளர்கள் பங்கேற்ற னர். தமிழகம் முழுவதும் தங்களுக் கான நிலுவை தொகையை அரசு வைத்திருப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்திற்கு வரவேண்டியத் தொகை ஓரிரு நாட்களில் வந்து விடும். வருகிற திங்கள் அல்லது  புதன்கிழமைக்குள் தொழிலா ளர்களுக்கான நிலுவைத் தொகையை தந்துவிடுவதாக பத்மாவதி நிறுவனத் தரப்பு  தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப் பட்டது. மேலும், பணி நேரம், வார விடுமுறை ஆகியவற்றையும் ஒழுங்குபடுத்தித்தருவது என மருத்துவமனையின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனையேற்று தொழிலாளர்கள் மதியம் பணிக்கு திரும்பினர்.