tamilnadu

ஈரோடு மற்றும் கோவை முக்கிய செய்திகள்

மின்கசிவு காராணமக கோழிப்பண்ணையில் தீ விபத்து 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலி

ஈரோடு,நவ.5- டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர் பாளையம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்தால் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலி உள்ளன. ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம், கொங்கர் பாளையம் கொளுஞ்சி காடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (35). இவர் அப்பகுதியில் பிராய்லர் கோழி பண்ணை நடத்தி வருகிறார். திங்களன்று இரவு சுமார் 11 மணியளவில் பொன்னம்பலம் கோழிப்பண்ணைக்கு பிராய்லர் கோழி குஞ்சுகள் லோடு வந்தது. அவர் அந்த கோழிக் குஞ்சுகளை இறக்கி பண்ணைக்குள் வைத்துள்ளார். அதனை தொடர்ந்து கோழி குஞ்சுகளை தனது பண்ணையில் இறக்கி விட்டு வெளியில் சென்ற சிறிது நேரத்தில் திடீரென கோழிப்பண்ணை தீ பற்றி எரிந்துள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்து தீயயை அணைத்தனர். ஆனால் கோழிப்பண்ணை முழுவதுமே எரிந்து சேதமானது. மின்கசிவு நடத்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதில் சுமார் 3 ஆயிரம் பிராய்லர் கோழிக் குஞ்சுகள் தீக்கிரையானதாக பண்ணை உரிமையாளர் பொன்னம்பலம் தெரிவித்தார்.

3 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை, நவ. 5- கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற நபரை கைது செய்து மூன்று கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.  சமீபகாலமாக கோவையில் கஞ்சா விற்பனை அதி கரித்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநிலத்தவரை குறிவைத்து நடைபெற்று வரும் கஞ்ச விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சி கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தடாகம் செங்கல் சூளைகளில் பணிபுரியும் வடமாநிலத்த வர்களை குறி வைத்துகஞ்சா விற்பனை செய்யப்பட்டு  வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத் துள்ளது. இதனையடுத்து, ஆய்வாளர் பாலமுரளி உத்தர வின் பேரில் தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே  சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தடாகம் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கணு வாய் பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் பன்னீர் செல்வம் (34) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.