tamilnadu

ஈரோடு, கோவை முக்கிய செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை
கோவை, ஜூலை 16- கோவையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடை பெற்ற சோதனையைத் தொடர்ந்து சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சப்பணம் புழங்குவதாக வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திங்களன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கணக் கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சார் பதிவாளர் அம்சவேணி மற்றும் அலுவ லக உதவியாளர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை யினர் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சார் பதிவாளர் அம்சவேணி உள்ளிட்ட 5 பேர் மீது 2 பிரிவு களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கம்பியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
உதகை, ஜூலை 16- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாளர் தேர்விற்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தகுதிவாய்ந்த கம்பியாள், உதவியா ளர்களிடமிருந்தும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை யால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடமிருந்து மற்றும் தேசிய புணரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப தாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறை யாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப் பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.  இதற்கான விண்ணப்பங்கள் குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் கள் வரும் 26ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் தகுதி காண் தேர்வு  நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 0423 2231759 2233010 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.