tamilnadu

ஈரோடு,கோவை முக்கிய செய்திகள்

ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் கைது

கோவை, ஜூலை 30- ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி மோசடி செய்த நெல்லை முத்துவிலாஸ் நிறுவனர் கோவையில் கைது செய்யப் பட்டார். தமிழக வியாபாரிகள் சங்கத்தின் தலை வர் பரமசிவம். கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் நெல்லை முத்துவிலாஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் முத்து சிட்பண்ட் என்ற நிறுவனம் நடத்தி வரு கிறார். இந்தநிலையில் பரமசிவம் நடத்தி வரும் நிறுவனத்தில் நிலம் வாங்குவதற்காக தவணை முறையில் ஏராளமானோர் பணம் செலுத்தியிருந்தனர். முழுமையான பணம் செலுத்திய நிலையில் அவர்களுக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து  கொடுக்கா மலும், சிட்பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 20 ம் தேதி கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திங்களன்று காந்திபுரம் அருகே உள்ள ஒரு விடுதி அறை யில் இருந்த பரமசிவத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை கோவை பொரு ளாதார குற்றத்தடுப்பு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்த னர். மேலும், அந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் ரசீதுகளுடன் வந்து புகார் அளிக்கலாம் என வெளியிடப் பட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை மறுப்பு

ஈரோடு, ஜூலை 30- காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க முடியாது என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது. ஈரோடு, சூரியம்பாளையம் அம்பேத்கர் நகர் சித்ரா(42). இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இவருக்கு வாய் பேச வராது. காதும் கேட்காத நிலையில், இவரது சகோதரியுடன் வசிக்கிறார். இவருக்கு, காது கேட்காது, வாய் பேச முடியாது என்பதால், திருமணம் செய்து கொள்ள எவரும் முன்வரவில்லை. இருப்பினும், சில வீடுகளில் பாத்திரங்கள் கழுவி பிழைப்பு நடத்துகிறார்.  இவருக்கு 100 சதவீதம் காது கேட்காது என்ற போதிலும், 95 சதவீதம் வாய் பேச முடியாது என மருத்துவர் சான்று வழங்கி உள்ளார். இந்த ஆவணங்களை வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் இவர் மனு வழங்கி, தனக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்கும்படி கேட்டார். அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை அழைத்து இவருக்கு உதவித் தொகை வழங்க பரிந்துரைத்தார். ஆனால் துறை அதிகாரிகள் 100 சதவீதம் பேச முடியாமல் இருந்தால் மட்டுமே, அவருக்கு உதவித்தொகை வழங்க இயலும். எனவே, இவருக்கு உதவித்தொகை பெற தகுதி இல்லை, எனக்கூறிவிட்டனர்.