கோவை, ஜூலை 27– வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணத்தை உயர்த்து வதைக் கைவிட வேண்டும் என இந்திய வங்கி ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய வங்கி ஊழியர் சம் மேளனத்தின் சார்பில் வங்கிகள் தேசிய மயத்தின் பொன்விழா ஆண்டு கருத்தரங்கம் மற்றும் கோவை மாவட்ட 5 ஆவது மாநாடு சனியன்று காந்திபுரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். சிவானந்தம் வரவேற்றார். கருத்தரங்கில் இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் தமிழக பொதுச்செயலா ளர் சி.பி.கிருஷ்ணன் மற்றும் மத் திய குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட 5 ஆவது மாநாட்டை துவக்கிவைத்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மத்தியக் குழு உறுப்பினர் ஹரிராவ் உரை யாற்றினார். மாநாட்டு அறிக் கையை மாவட்ட பொதுச்செயலா ளர் ஆர்.மகேஷ்வரன் முன்வைத் தார். யூனியன் வங்கி ஊழியர் சங் கத்தின் தலைவர் என்.ஜெய பாலன் வாழ்த்திப் பேசினார்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப் படுத்தும் நடவடிக்கைகளை மத் திய அரசு கைவிட வேண்டும். மக்கள் சேமிப்பை கார்ப்பரேட்டு கள் கொள்ளையடிப்பதைத் தடுக்க பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும். மாணவர் களின் சமநிலையை குலைக்கும் புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். வங்கி ஊழியர்களுக் கான 11 ஆவது இருதரப்பு ஒப்பந் தத்தை நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும். கோவையில் குடி நீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் அபாயமான முடிவை கோவை மாநகராட்சி கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து மாநாட் டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக கணேசன், பொதுச் செயலாளராக ஆர்.மகேஷ்வரன், பொருளாளராக தனபால் மற்றும் கோபாலகிருஷ்ணன், ஜெயசந்திரன், சிந்து, சிவலிங்கம் உள்ளிட்ட 30 பேர் கொண்ட நிர்வாக்குழு தேர்ந்தெடுக் கப்பட்டது.