tamilnadu

img

மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிக்கு தகுதி

தொப்பூர் அரசு பள்ளி மாணவர்கள்

தருமபுரி, நவ.29- தருமபுரியில் மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தொப்பூர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற் றுள்ளனர். தமிழ்நாடு  பள்ளிக் கல்வித்துறை சார்பில் தருமபுரி வரு வாய் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள், ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டை பாப்பி ரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  இதில் தொப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை பிரிவில் அஜீத்குமார் வெள்ளிப் பதக்கமும், ஸ்குவாஷ் போட்டியில் கோபிகா, பிரியதர்ஷினி நத்த குமார், திலிப்குமார் - 11 ஆம் வகுப்பு, சரத்குமார் ஆகியோர்  தங்கம் வென்றார்கள். இந்த மாணவர்கள் தூத்துக்குடியில் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கவுள்ள மாநில அள விலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர் முனி மாதன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஞானவடி வேல்குமரன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் தன பால் மற்றும் சிவபிரகாசம்,பி.தங்கவேல், செந்தில் , உடற் கல்வி ஆசிரியர் தனபால், இருபால் ஆசிரியர்கள், மாணவ,  மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.