சேலம், செப்.13- மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுமென வழக்க றிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ, மாண விகள் பங்கேற்ற விழிப் புணர்வு பேரணி சேலத்தில் நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனியன்று சேலத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த மக்கள் நீதி மன்றத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளியன்று நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவ, மாணவி கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இப்பேரணியை மாவட்ட நீதிபதி குமரகுரு துவக்கி வைத்தார். நீதிபதிகள் சக்திவேல் மற்றும் இளங்கோவன், ராஜேந்திரன், முனுசாமி, செந்தில்குமார், சிவா, ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி அஸ்தம்பட்டி ரவுண்டானா, வின்சென்ட், குமாரசாமிப்பட்டி வழியாக அரசு கலைக் கல்லூரியில் முன்பு முடிவ டைந்தது.