கோவை, ஜூலை 30– பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையைத் தனி யாருக்கு விற்க துடிக்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து சிஐடியு இன்ஜினியரிங் சங்கத் தின் சார்பில் கோவைவில் செவ்வா யன்று மாபெரும் தர்ணா போராட் டம் நடைபெற்றது கார்ப்பரேட் நலனுக்காக பொது துறை நிறுவனங்களை விற்காதே, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தாதே, தொழிற்சங்க உரிமை யைப் பறிக்காதே, எளிய மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்வி கொள்கையைக் கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கோய முத்தூர் டிஸ்ட்ரிக் ஜெனரல் இன்ஜி னியரிங் அன்ட் மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐடியு சார் பில் செவ்வாயன்று துடியலூர் பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங் கத்தின் பொதுச்செயலாளர் சி.துரைசாமி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்்த்தி, சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, இன்ஜினியரிங் சங்க தலைவர் வி.பெருமாள், பொருளாளர் ஏ.ஜி.சுப்பிரமணி மற்றும் ஆர்.கேசவமணி, கே.சண் முகம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக, இந்த தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் தொழி லாளர் விரோத நடவடிக்கை கண் டித்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.