tamilnadu

திமுக மாவட்ட செயலாளர் கைது - எம்எல்ஏ கண்டனம்

கோவை, மே 31 –  திமுக பிரமுகர்கள் மீது காவல்துறை யினர் திட்டமிட்டு பொய்வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகள் கோவையில் தொடர்ந்து வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் ஆகியோர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரா ஜக காவல்துறையினரால், கோவை புற நகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் இருவர் மீதும்  பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர்.  அதிமுகவினர் மிகவும் ‌கீழ்த்தரமாக, திமுக கழகத்தைப் பற்றியும், வன்முறை யைத் தூண்டும் வகையிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க தமிழக காவல்துறையினர் மறுக்கின்றனர். அதேசமயம் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர் கதையாக உள்ளது. இதனை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், காவல்துறையின் இந்த மிரட்டலுக்கு  திமுக எப்பொழுதும் அஞ்சாது என்றும், வழக்கை சட்டரீதியாக சந்தித்து வெல் வோம் எனவும் தெரிவித்துள்ளார்.