tamilnadu

img

முகநூல் பதிவிற்காக திவிக நிர்வாகி கைது

கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 31–  இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிக்கெதிரான நடவடிக் கையை அம்பலப்படுத்தி முக நூலில் பதிவிட்ட திராவிடர் கழக நிர்வாகி நிர்மல்குமார் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த  காவல்துறை மற்றும் தமிழக அர சின் கருத்துரிமை அடக்குமுறையை கண்டித்து கோவையில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கோவை தெற்கு தாலுகா அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினர் சி.பத்ம நாபன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி.கலையரசன், திரா விடத்தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் நேரு தாஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்  சிஐடியு  மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட நிர்வாகி எம்.அருணகிரிநாதன்,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள்  ஜோதி, கரீம், சிபிஐ(எம்எல்) லூயிஸ், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் செயலாளர் அஷ் ரப்அலி, தமிழர் வாழ்வுரிமை கட்சி யின் சிவபாலன், ரெட்ஸ்டார் குசே லன் உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் பங்கேற்று கருத்துரி மையை பாதுகாப்போம், நிர்மல் குமாரை விடுதலை செய்ய வேண் டும் என ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.