tamilnadu

img

இரு மாத ஊதியம் வழங்குவதில் பாரபட்சம்

பிஎஸ்என்எல் அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 4 - பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், அலுவலர்களுக்கு இரண்டு மாதங் களாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், ஐடிஎஸ் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் சம்பளம் வழங்க இருக்கும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் பார பட்சமான நடவடிக்கையைக் கண்டித்து திருப்பூர், பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலை பேசி நிலையம் முன்பாக புத னன்று நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், பிஎஸ்என்எல் நிறு வனத்தில் பணியாற்றும் ஊழி யர்கள், அலுவலர்களுக்கு அக் டோபர், நவம்பர் ஆகிய இரு மாத  சம்பளத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். ஊழியர் கள், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்காத அதேசமயம், அயர் பணியில் இங்கு வந்திருக்கும் ஐடிஎஸ் (இந்திய தொலைத் தொடர்பு பணி) உயர் அதிகாரி களுக்கு சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பாரபட்சமான உத்தரவை பிஎஸ்என்எல் நிர்வாகம் பிறப் பித்து அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளர் என்.ராமசாமி தலைமை தாங்கி னார். இதில் அதிகாரிகள் சங் கத்தின் சார்பில் கேசவன், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிர மணியன், மாவட்டத் தலைவர் ஏ.முகமது ஜாபர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சங்கத்தின் கிளைத் தலை வர் வாலீசன் நன்றி கூறினார். நிகழ்வின் நிறைவாக மேட்டுப் பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்லடம்

இதே கோரிக்கையை வலியு றுத்தி பிஎஸ்என்எல் பல்லடம் அலுவலகம் முன்பாக பிஎஸ்என் எல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைத்து சங்கங்களின்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் சங்கி லித்துரை தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் காந்தி கோரிக்கை உரையாற்றி னார். நிறைவாக கிளைப் பொரு ளாளர் முருகானந்தம் நன்றி கூறி னார்.