tamilnadu

img

தருமபுரி: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தருமபுரி, டிச.18- தருமபுரி மாவட்டத்தில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் டி.பி.ராஜேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் வரும் டிச.27 ஆம் தேதி முதல் கட்டமாகவும், டிச.30 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும்  நடைபெற உள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மாவட்ட  பார்வையாளராக  டி.பி.ராஜேஷ்,  நியமிக் கப்பட்டுள்ளார். இவர் காரிமங்கலம் மற்றும்  பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங் களில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை நிகழ்வுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் அலுவ லர்களுடன் ஆலோசனை நடத்திய அவர்  பதற்றமான  வாக்குச்சாவடிகளில்  முன்னேற் பாடு நடவடிக்கைகள் மற்றும் பாது காப்புகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை  ஆலை மேலாண்மை இயக்குநர் அ.சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், மாவட்ட ஆட்சியரின்  நேர்முக  உதவியாளர் (சத்துணவு) வேதநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன் பழகன், வடிவேலன், வெங்கடேஷ்  உள் ளிட்ட  அலுவலர்கள் கலந்துகொண்டனர்.