திருப்பூர், அக். 18- உடுமலைப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். உடுமலை நகராட்சி திருமண மண்டப வளாகத் தில் தொடங்கிய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் மண்டபத்தினை வந்தடைந்தது. இப்பேரணி யில், டெங்கு காய்ச்சல் பற்றி பொது மக்கள் அறிந் திடும் வகையில் விளம்பர பதாதைகளை ஏந்திய வாறும், விழிப்புணர்வு கோஷமிட்டவாறும் சென்றனர். இதில், உடுமலைப்பேட்டை வரு வாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ், வட்டாட்சி யர் தயானந்தன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் பொது மக்கள் குடிநீரினை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்கவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண் டும். அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தனி கவனம் செலுத்தி கொசு உற்பத்தியை தடுக்க இயலும். காய்ச்சல் இருப்பின், மருத்துவர்களின் ஆலோ சனைப் பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்து களை உட்கொள்ளக்கூடாது. தொடர்ந்து மூன்று நாள் காய்ச்சல் இருந்தால், ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.