கோவை, மே. 13 - தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்கக்கோரி, கோவையில் பல்வேறு அமை புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஊரடங்கு காலத் தில் மட்டும் தலித்துகள் மீது 40க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் கள் நடைபெற்றுள்ளது. எனவே, தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவித்திட வேண் டும். இவ்வாறு சாதி ஆணவத்தோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். விழுப்புரம் மாவட்டத்தில் எரித்து கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கொலைகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை கோபால புரம் பகுதியில் திராவிடத் தமிழர் கட்சி, திவிக, தபெதிக உள்ளிட்ட அமைப்பினர் முககவசம் அணிந்த படி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரா விட தமிழர் கட்சியின் வெண்மணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் ஆறுச் சாமி, திவிக நேருதாஸ், தபெதிக சாஜித் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பி னர்.