ஈரோடு, மார்ச் 20- கொரோனா வைரஸ் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அமைப்புகளின் தலைவர் களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவா மல் தடுக்க பல்வேறு நடவடிக்கை களை அரசு போர்கால அடிப்படை யில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர் களுடன் கொரோனா வைரஸ் காய்ச் சல் தடுப்பு நடவடிக்கைக் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் கூட்டரங்கு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் ஆகியோர் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் ஏராளமா னோர் கலந்து கொண்டு தங்களின் கருத்தையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். மேலும் முகக்கவசம், கிருமி நாசினி எளிதில் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டது.