tamilnadu

img

கொரோனா வைரஸ்: ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் மூடல்

ஏற்காடு, மார்ச் 17- கொரோனா வைரஸ் தொற்று ஏற் படுவதை தவிர்க்கும் பொருட்டு, ஏற் காட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள் ளது.    அதன்படி, தமிழகத்தின் பிரதான சுற் றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி கள் மூடப்பட்டு வருகின்றன.   மேலும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், படகு இல்லம் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளது. சாலையோர தள்ளு வண்டி கடைகள் உள்ளிட்டவைகளும்  மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.