tamilnadu

img

சட்டமன்றத்தில் எளிய மக்களின் குரலாய் ஒலித்த தோழர் கே.சி.கே

2001 ஆம் ஆண்டு கோவை சிங்காந ல்லுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2006 ஆம் ஆண்டு வரை  சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு அத்தொகுதி மக்களின் மனதில் நீங்க இடம்பெற்றவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.சி.கருணாகரன். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி என்பது வெள்ளலுர் பேரூராட்சி தொ டங்கி மாநகராட்சியின் 17 வார்டுகள், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திலிருந்த 6 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் என  அவர்  வீட்டிலிருந்து தொகுதி முழுவதும்  போய் வர சுமார் 100 கி.மீ தொலைவை உள்ளடக்கிய தொகுதி ஆகும். இருப்பி னும், தனது சட்டமன்ற உறுப்பினர் பணி  காலம் முழுமையும் பெரும்பகுதி இரு சக்கர வாகனம் மூலமே தொகுதியை சுற்றிவந்து மக்கள் பணிகளை மேற் கொண்டார். இதற்கும், அப்போதைய ஊராட்சி, பேரூராட்சி தலைவர்கள் சொகுசு கார்களில் வலம் வந்தேபோது அரசு நிகழ்ச்சிகளுக்கு விழா நாயக னாக செல்லும் கே.சி.கே, இருசக்கர வாக னத்தை ஓட்டி சென்று அந்நிகழ்ச்சியில் பங்கேற்பார். மாற்று கட்சியினர் ஆச்சர்ய மாக கேட்கையில், நாங்கள் கம்யூ னிஸ்ட்கள், இதுவே போதுமானது எனக் கூறி புன்னகையுடன் அவர்களிடமிருந்து விடைபெறுவார். சில நேரங்களில் அவ ரது இருசக்கர வாகனத்தை அலுவலக செயலாளர் எடுத்து சென்று இருந்தால், யாரையும் எதிர்பார்க்காமல் நகர பேருந் தில் ஏறி விழா நிகழ்விற்கு பயணப்ப டுவார்.

தொழிலாளிகளை வஞ்சிக்காதீர்...

இவ்வாறு எளிமையின் அடையா ளமாக இருந்து அவர், சட்டமன்ற உறுப்பி னராக பதவியேற்றபின் பங்கேற்ற முதல் கூட்டத்தில் (30.5.2001) தனது துவக்க உரையாக தொகுதியில் மூடப்பட்டுள்ள 10 பஞ்சாலைகளின் பெயர்களை பட்டி யலிட்டு, அதனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசி னார். மேலும், அதுவரை தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.250ஐ என்கிற நிவாரண தொகையை ரூ.760  ஆக உயர்த்தி தர கேட்டும், மூடப்பட்ட  ஆலைகளை திறக்க முத்தரப்பு குழு  ஒன்றை அமைக்க கோரியும் ஆவேசமாக  பேசினார். இதேபோல், பஞ்சாலை  நலிவிற்கு நிர்வாகமும் மூலப்பொ ருட்களின் விலையேற்றம்தான் காரண மேயொழிய, தொழிலாளிகள் அல்ல. ஆகவே, தொழிலாளிகளை இனியும் வஞ்சிக்கக் கூடாது எனவும், 10 ஆயிரம் தொழிலாளிகளின் பசி பட்டினிக்கு தீர்வு  காண நடவடிக்கை எடுங்கள் என்றும் முழுங்கினார். இவ்வாறு 18 முறை வாய்ப்பு கிடைத்த போதெல்லம் மூடப் பட்ட ஆலைப் பிரச்சனை குறித்து தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசி னார். அதே கூட்டத்தொடரில், சிங்கா நல்லூர் தொகுதியில் அங்கீகரிக் கப்படாத மனைப்பிரிவுகளில் அடிப் படை வசதிகளை செய்ய மனைகளை அங்கீகாரம் வழங்க கேட்டும், மனை களை முறைப்படுத்த பொது ஒதுக்கிட்டு இடத்திற்கான தொகையில் 50 சதவி கிதம் வீட்டின் உரிமையாளரே செலுத்த வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கு செலவில்லாத வெறும் நிர்வாக நடைமுறை சிக்க லால் 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். வெறும் பேப்பர் நடைமுறை களை சொல்லி காலதாமதம் செய்வதை எற்க முடியாது என்று தொடர்ந்து 10க்கும்  மேற்பட்ட முறையில் சபையில் பேசியும், மக்களை திரட்டியும் போராட்ட களம் கண்டவர். மேலும், அன்றைய மாநகராட்சி கவுன்சிலர்கள் 32 பேர் அங்கீகரிக் கப்பட்ட மனைப்பிரிவு பிரச்சனையை தீர்க்கக்கோரி மாநகராட்சி கூட்டத்தி லிருந்து வெளிநடப்பு செய்ததை சட்ட மன்றத்தில் எடுத்துக்கூறி நிலைமை யின் தீவிரத்தை உணர்த்தி முதல்வரின்  கவனத்தை ஈர்த்தார்.  கே.சி.கே-வின்  தொடர் முயற்சியால் மனைப்பிரிவிகள் முறைப்படுத்துதல் சட்டம் எளிமையாக் கப்பட்டு வீட்டு உரிமையாளரின் சுமை யும் குறைந்தது. தற்போது, இம்மனைப் பிரிவுகளில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருவதற்கு கே.சி.கே-வின் முன் முயற்சியும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

டைட்டல் பார்க்-கின் அடித்தளம்

கோவையில் மென்பொருள் பூங்கா  (டைட்டல் பார்க்) பணிகளை உடனடி யாக துவங்க கேட்டு ஆழமான விவா தத்தை முன்வைத்தார். குறிப்பாக, இந்த  பணியை உடன் துவங்கினால் ரூ.20 ஆயி ரம்  கோடியை தாண்டும் என்று புள்ளி விபரத்தோடு எடுத்துரைத்ததோடு மட்டு மல்லால், 6 முறை இதே கோரிக்கை வலியு றுத்தி துறை அமைச்சர், எல்காட் இயக்கு னர் ஆகியோரை 5க்கும் மேற்பட்ட முறை  நேரில் சந்தித்தார். இத்தகைய பின்னணி யிலேயே தற்போது கோவையில் டைட் டல் பார்க் வானளவில் உயர்ந்து நிற்கிற தென்றால் கே.சி.கே.வின் பெரும் முயற்சியே அதற்கான அடித்தளமாகும். மேலும், முறைசாரா தொழில்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழில் ரீதியான வாரியங்கள் அமைக்க  வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய தொழில் மற்றும் ஆதாரத் தொழில்க ளான கைத்தறி, விசைத்தறி, பனியன்  பஞ்சாலை, இன்ஜினியரிங் தொழில்க ளின் எதிர்காலம் கேள்விகுறி ஆக்கப்பட் டுள்ள நிலை குறித்தும் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார். இதேபோல்,  கோவை பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டம் என்கிற பெயரில் இளம்பெண்களின் உழைப்பு சுரண்டப்பட்டு, கொத்தடிமை களாக நடத்தப்பட்டு வருவதை அரசு நிர்வாகத்திற்கும், வெளியுலக்கிற்கும் அம்பலப்படுத்தி நடவடிக்கைக்கு தூண்டி னார்.

பெயரை தாங்கி நிற்கும் பணிகள்...

வையம்பாளையம் கூட்டுறவு வங்கி யில் பதவியிலிருந்தவர்கள் மக்களின்  சேமிப்பு தொகையை களவாடி ஏமாற்றி யதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி முழுநாள்  உண்ணாவி ரதம் இருந்தது மட்டுமல்லாமல், சட்டச பையில் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து அரசு வங்கி என்ற  காரணத்தினால் அரசை நம்பி பணத்தை போட்டுள்ளனர். ஆகவே, இதற்கு அரசே  பொறுப்பு என அரசின் மீது குற்றம் சுமத்தி  பாதிக்கப்பட்ட 401 பேருக்கு ரூ,47 லட்சம்  திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்தார்.  இதேபோல், சிங்காநல்லூர் குளத் தில் கழிவு நீர் கலப்பதற்கெதிராக தொடர்ந்து வலியுறுத்தி சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட முன் நின்றார். கோவையின் வீட்டுவசதி குடியிருப்பு பராமரிப்பின்றி இடிந்து விழும் அவலம் குறித்தும், பணம் முழுமையாக கட்டிய பயனீட்டாளர்களுக்கு பத்திரம் தர மறுக் கும் நிலை குறித்தும் ஆவேசம் பொங்க சட்டசபையில் பதிவிட்டார்.  இதுமட்டுமின்றி கணுவாய் முதல்  சின்னவேடம்பட்டி நீர்வரத்து வாய்க் கல் குளம் ரூ.40 லட்சம் செலவில் தூர்வா ரியது. 15 ஆண்டுகாலமாக தூர்வாரப்ப டாமல் இருந்த வெள்ளலூர் ராஜாவாய்க் கல் தூர்வாரப்பட்டது, தொகுதியின் பிர தான சாலைகளான காமராஜர் சாலை, திருச்சி சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க முன்முயற்சி எடுத்தது, தொகுதி வளர்ச்சி நிதி மூலம் 10 நூலகம், ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மாண வர் விடுதிகள், சமூக கூடங்கள், பள்ளி கட் டிங்கள் பள்ளிகளுக்கு வெள்ள தடுப்புச் சுவர் என ஏராளமான பணிகள்  அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு பதிவிட பல நூறு பணிகள் கே.சி.கே-வின் பெயரை தாங்கி நிற்பது டன், கே.சி.கே புகழ் ஒங்குக  என பறை சாற்றுகிறது.                                            

 கே.அஜய்குமார் சிபிஐ(எம்) கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்.