tamilnadu

தமிழகத்தில் கல்லூரி வகுப்புகள் சுழற்சிமுறை ரத்து

மறுபரீசிலனை செய்ய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், மே 15 – தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து செய்வதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருப்பதை ஏழை  மாணவ, மாணவிகள் நலன் கருதி மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று இந்திய  மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பிரவீன்குமார், மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது ஆகி யோர் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மாநில கல்லூரி கல்வி இயக்ககம், கல்லூரிகளில்  சுழற்சி முறை ரத்து செய்யப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பீதியே இன்றும் தீராத நிலையில் மூன்று  தினங்க ளுக்கு முன்பு  பள்ளிக்கல்வித் துறை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கான தேதியை வெளியிட்டது. அதேபோல் கல்வி  சார்ந்தும், கல்விக்கொள்கைகள் சார்ந்தும் இந்த அவசர கால கட்டங்களில் அரசானை களை வெளியிடுவதையும் அரசு நன்கு பரிசீ லிக்க வேண்டும். கல்லூரி கல்வி இயக்குந ரகம் வெளியிடும் இந்த செய்தியில் பல்வேறு  குழப்பங்கள் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் எல்.ஆர்.ஜி  மகளிர் கலைக் கல்லூரி உட்பட 6 அரசு  கல்லூரிகள் உள்ளன. பெரும்பான்மை யான மாணவர்களின் பெற்றோர்கள் பனி யன் தொழிலையே சார்ந்திருக்கின்றனர். அது மட்டுமின்றி பல்வேறு மாணவர்கள் பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க  கூடியவர்களாகவும்,  காங்கயம், உடுமலை, பல்லடம், அவிநாசி கல்லூரிகள் பயிலும் மாணவர்கள் விவசாய பின்புலத்தை சார்ந்தவர்களாகவும், பகுதிநேரம் விவசாய மற்றும் அதைச் சார்ந்த சந்தைப்படுத்தும் பணி செய்பவராகவும் உள்ளனர். இதை யெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அரசு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு மாணவர்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிரமப்பட்டு வரும் சூழலில் அவர்கள் பகுதி நேர வேலை செய்யும் வாய்ப்பும் இழந்தால் உயர் கல்வி கற்பவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். அதனால் உயர்கல்வி கற்ப வர்களின் எண்ணிக்கையும் தற்போதைய கல்வியாண்டில் கணிசமாக குறையும். அது மட்டுமின்றி நிர்வாகரீதியாக இரண்டாம் சுழற்சியில் ஏற்கனவே படித்து வந்த மாண வர்கள் தற்போது முதல் சுழற்சியில் படிப்பை  தொடர்வார்களா? அல்லது அதே சுழற்சியில் தொடர்வார்களா? அல்லது இரண்டாம் சுழற்சிக்கான முதலாண்டு அட்மிசன் நடைபெறாதா? அப்படியானால் இரண்டாம் சுழற்சியில் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்னவாகும்? போன்ற பல்வேறு குழப்பங்களுக்கு தெளிவாக விளக் கம் அளிக்காமல் சுழற்சி முறை  ரத்து செய்யப் படுவது என்ற அறிவிப்பு முறையற்றது. எனவே திருப்பூர் மாவட்டம் போன்ற பல  மாவட்டங்களின் சூழலினை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவிப்புகளை பரிசீ லனைக்கு உட்படுத்த வேண்டும். நோய்த் தொற்று சீரான பிறகு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை இணைத்துக் கொண்டு கல்லூரி இயக்ககம் இதுபோன்று அறிவிப்பதே முறையாக இருக்கும் என்று மாணவர் சங்கம் கருது கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;