tamilnadu

img

தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு கோவை மாணவர்கள் தேர்வு

கோவை, நவ.7– பள்ளி விளையாட்டு சாம்பியன்சிப் தேசிய அள விலான மல்யுத்த போட்டி யில் பங்கேற்க கோவை  மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  2019-2020க்கான தேசிய மல்யுத்த போட்டிக் கான தேர்வு கடந்த 2 ஆம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டி யில் கோவை சிலம்பாலயாவின் பயிற்சி பெற்ற சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சைன்ரிச் மற்றும் ஒய்.டபுள்யுசி.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம்  வகுப்பு பயிலும் பிரசில்லா ஏஞசல்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக தேர்விற்கான போட்டியில் பங்கேற்ற பிரசில்லா ஏஞ்சல் முதல் பரிசை பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பாலயா அறக்கட்டளை நிறுவனரும், தலைமை பயிற்சியாளருமான டாக்டர் செல்வக்குமார், பயிற்சியாளர் சரண்ராஜ், ரஞ்சித்குமார், காவல் சிறுவர் மன்ற பொருப்பாளர் சீனிவாசன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி உற்சாகப்படுத்தினர்.