கோவை, ஜூலை 28– சிறு குறுந்தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கான எண்ணமில்லை என்று மத்திய அமைச்சர் சொல்லியிருப்பது பாஜ கவின் ஆணவப்போக்கின் வெளிப்பாடு என கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரக்குழுவின் சார்பில் சிவானந்த காலனி பகுதியில் ஞாயிறன்று கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் புதிய கல்வி கொள் கையின் ஆபத்து குறித்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றார். இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி முறையை மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கிறது. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என அடுத்தடுத்து தேர்வை திணித்து, ஏழை எளிய மாணவர்களின் இடைநிற்றலை திட்டமிட்டு உருவாக்கவும், கல் வியை வணிகமயமாக்கவும் பாஜக அரசு முயற்சிக்கிறது. வங்கி தேர் வில் பொது பிரிவினர்க்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் ஒதுக்கியது ஏற்க முடியாது . பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு எட்டு லட்சம் ரூபாய் வருவாய் என்கிற மத்திய அரசின் நிர்ணயிப்பை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. சிறு குறு தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடி யாது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது ஆண வத்தின் வெளிப்பாடாக பார்க்கி றேன். தமிழகத்தில் பாஜகவிற்கு இவ்வளவு பெரிய அடி விழுந்தும் புத்தி வரவில்லை எனில், புத்தி வர வைக்கும் ஏற்பாட்டை தமிழக மக்களோடு சேர்ந்து செய்வோம் என்றார். முன்னதாக இந்த கையெழுத்து பிரச்சார இயக்கம் கணபதி, கணப திபுதூர், காமராஜபுரம், ரத்தினபுரி உள்ளிட்ட கோவை வடக்கு சட்ட மன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் சிபிஎம் வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன், மற்றும் வடக்கு நகரக்குழு உறுப்பி னர்கள் செல்வம், சுந்தரம், விஸ்வ நாதன், நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.