tamilnadu

கோவை : சொத்துவரி வசூல் பணிகளை துரிதப்படுத்த முடிவு

கோவை, அக்.8- கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்ட ரங்கில் வருவாய் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநக ராட்சி ஆணையாளரும், தனிஅலுவலருமான பெ.குமார வேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி ஆணையர் கூறியதாவது, கோவை மாநக ராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் உரிய சொத்துவரி வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வசூல் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சொத்துவரி விதிப்பு 20 நாட்கள் மற்றும் சொத்து வரி பெயர் மாற்றம் 10 நாட்கள் கோரும் விண்ணப்பங்க ளின் மீது உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.