‘ஓப்பில்’ நிறுவனத்தின் சூப்பர் எல்இடி விளக்குகள் அறிமுகம்
கோவை, நவ.3- எல்.ஈ.டி லைட்டிங் ஸ்பேஸில் எப்போதும் விரிவடைந்து வரும் ஒளிரும் இந்தியா, கோப் லைட் எனப்படும் சூப்பர் எல்இடி வேரியண்ட்டை தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் OPPLE இன் RGB ஸ்ட்ரிப் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அவர்களின் ஆர் அன்ட் டி துறையின் அர்ப்பணிப்பு ஒரு முக்கிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது. ஹோட்டல், வீடுகள், உணவகங்கள் மற்றும் சில்லறை கடைகள் போன்ற அனைத்து இடங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். பிற குறிப்பிடத்தக்க பெனிஃபிட்களு டன், அதன் சுத்தமான பீம் அம்சத்துடன் தயா ரிக்கப்பட்டுள்ளது என ‘ஓப்பில்’ நிறுவனத்தின் செய்தி தெரி விக்கிறது. ஃப்ளிக்கர் இல்லாத வெளிச்சம் கண்களை பாது காக்குகிறது; அதன் பரந்த அளவிலான கட்-அவுட் விரிவான பகுதிக்கு வெளிச்சம் தருகிறது. COB ஒளியின் உயர் செயல்திறன் ஆற்றல் செயல்திறனைக் கவனித்துக்கொள் கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகச் சிறந்தது. அதே நேரத்தில் அதன் கவர்ச்சிகரமான வடிவமைப்பு வீட்டிற்கு ஒரு சிறந்த அழகைக் கொடுக்கிறது. உள் எல்.ஈ.டி வெப்பத்தின் ஒவ்வொரு அவுன்ஸ் அதன் AI ஹீட் சிங்க் அம்சத்துடன் பயன்படுத்துவதையும் இது உறுதி செய்கிறது, இதனால் எல்.ஈ.டி யின் ஒளி வெளியீடு மற்றும் வாழ்நாள் பயன் பாட்டை நீட்டிக்கிறது எனவும் அச்செய்தி கூறுகிறது. பாதுகாப்பான ஆரோக்கியத்தின் அறிக்கையின்படி, “எல்.ஈ.டி விளக்குகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது கண்பார்வை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது”. இதுதொடர்பாக 50 நபர்கள் மீது ஒரு சோத னையை நடத்தினர். அங்கு அவர்கள் 15 நாட்களுக்கு 4 மணி நேரம் எல்.ஈ.டி ஒளியை உள்வாங்கினர். எல்.ஈ.டி ஒளிரும் விளக்குகளின் குறுகிய கால விளைவுகள் தலை வலி, கஷ்டமான கண்கள், மன சோர்வு மற்றும் உணர்ச்சி ஏற்றத்தாழ்வு ஆகியவை அடங்கும். NRK OPPLE லைட்டிங் இந்தியாவின் நாட்டின் தலை வரான ராம்போ ஜாங், மேற்கண்ட பாதிப்புகளை தவிர்ப்ப தற்காக COB லைட்டில் செய்யப்பட்டுள்ள முதிர்ச்சி யடைந்த ஃப்ளிக்கர்-இலவச அம்சத்தை விரிவாகக் கூறு கிறார். “OPLLE LED விளக்குகள் முழுமையான ஆர் & டி செயல்முறையின் விளைவாகும் மற்றும் அவற்றின் சுழற்சி யில் ஃப்ளிக்கர் இல்லாத செயல்பாடுகள் உறுதி செய்யப் படுகின்றன” என்கிறார்.
சிவகங்கை காவல்துறைக்கு அனைத்துக் கட்சிகள் கண்டனம்
சிவகங்கை, நவ.3- சிவகங்கை பூவந்தியில் காவல்துறையைக்கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நவம்பர்13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் ஜெயச்சந்திரன் (காங்.) தலைமையில் நடைபெற்றது. சேங்கை மாறன் (திமுக). ஆர்.கே.தண்டியப்பன், அய்யம் பாண்டி. ஜெயராமன், கருப்பையா, ஈஸ்வரன் ‘(சிபிஎம்), சேகர் (மதிமுக), சுந்தரலிங்கம் (சிபிஐ), கண்ணன் (விசிக), நாகரெத்தினம் (புதிய தமிழகம்) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பூவந்தியில் சட்டவிரோத மணல் கொள்ளையைக் கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டியை கொலை செய்து விடுவதாக பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய மாயக்கிருஷ்ணன் மிரட்டினார். மாயக்கிருஷ்ணன் மற்றும் அவரைத் தூண்டி விட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி பூவந்தியில் நவம்.13-ஆம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடத்துவது தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும், குடிமராமத்துப் பணிகள் விவசாயிகள் பங்க ளிப்பின்றி ஆளும் கட்சியினர் ஊழல்- முறைகேடாக செயல்படுத்திவருகின்றனர். குடிமராமத்துப் பணிகளில் நடைபெறும் முறைகேடு கள் குறித்து லஞ்ச ஒழிப்புகாவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புவனம் வாரச் சந்தையை முறையாக நடத்த நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரஜினிக்கு விருது நடிகர்கள் நிஜவாழ்க்கையில் நடிக்கக்கூடாது: அமைச்சர்
திருவில்லிபுத்தூர், நவ.4- திரைப்பட நடிகர்கள் நிஜவாழ்க்கையில் நடிக்கக் கூடாது என அமைச்சர் இராஜேந்திர பாலாஜி கூறினார். திருவில்லிபுத்தூரில் சனிக்கிழமை செய்தியாளர்களை அழைத்து அவர் கூறியதாவது:- மத்திய அரசு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமான விருது, அவரது நடிப்பு, அவரது பணி, அவரது யதார்த்தமான பேச்சிற்கு இந்த விருது கிடைத் துள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேச லாம். நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் திரைப்படத்தில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்கக் கூடாது. திமுக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்கப்போகிறது. திமுக ஆட்சியில் பத்துக்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். அப்போது ஸ்டா லின் என்ன நடவடிக்கை எடுத்தார் எனக் கேள்வி யெழுப்பினார்.
இரு சக்கர வாகனம் மீது கார் மோதல் : ஒருவர் பலி
விருதுநகர், நவ.3-விருதுநகர் அருகே பெரிய மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவர், விருதுநகரில் உள்ள வங்கிக்குச் சென்று வருவதாகக் கூறி விட்டு, இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். விருதுநகர் நான்கு வழி சாலை யில் தனியார் ஆலை அருகே வந்த போது, மதுரையிலி ருந்து சாத்தூர் நோக்கிச் சென்ற கார் இரு சக்கர வாக னத்தின் மீது மோதியது. இதில், சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். விருது நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதனை செய்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரி வித்தனர். இது குறித்து அவரது மகள் சங்கரேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கார் ஓட்டுநர் பொள்ளாச்சியைச் சேர்ந்த தேவசகாயம் மீது வழக்குப் பதிவு காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.