tamilnadu

கோவை, சேலம் முக்கிய செய்திகள்

ஒருநாள் உள்ளூர் சுற்றுலா திட்டம் அறிமுகம்

கோவை,டிச.14- கோவையில்  தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக்கழகம், ஓட்டல் தமிழ்நாடு கோயம்புத்தூர் கிளையின் சார்பில் ஒருநாள் உள்ளூர் சுற்றுலா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக்கழகம், ஓட்டல் தமிழ்நாடு கோயம்புத்தூர் கிளை மூலமாக ஒருநாள் உள்ளூர் சுற் றுலாதிட்டம் சனியன்று அறி முகப்படுத்தப்பட்டது. இத்திட்டத் தின் முதல் சுற்றுலா பயணத்தினை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்  தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த குமார், சுற்றுலாவளர்ச்சிக் கழகம்,  ஓட்டல் தமிழ்நாடு கோயம்புத்தூர்  கிளையின் மேலாளர் த.உதயசங் கர், உதவிசுற்றுலா அலுவலர் சதீஸ் குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்  தெரிவிக்கையில், தமிழ்நாட்டின்  சுற்றுலாச் சிறப்புகளைப் சுற்றுலா  பயணியர் அனைவரும் அறிந்து  கொள்ளும் வகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாநில  சுற்றுலாத்துறை வனத்துறையுடன்  இணைந்து பல்வேறு சிறப்பு முயற்சி களை மேற்கொண்டு வருகின்றது.  இதற்கு எடுத்துக்காட்டாக மலை வாழ் மக்களை உள்ளடக்கிய பரளி காடு சுற்றுலா பயணம் உள்ளிட்டவை சான்றாக அமையும், சுற்றுலா என் பது மகிழ்ச்சியைத்தாண்டி, நம்மை சுற்றி அமைந்திருக்கும் நமக்கு அறி யாத அரிய பொக்கிஷங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை வழங்குவதாகும். சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் கடந்த 4 ஆண்டுகளாக முதல் நிலை யில் உள்ளது. அதாவது உள்ளூர் சுற் றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் நாம் முதலி டத்தில் தான் இருக்கிறோம். இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதல் நிலையில் இருந்தாலும், உலக சுற்று லாவில் நமக்கு முதல் இடம் பெறு வதை இலக்காக கொண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் செயல் பட்டு வருகின்றது கோவை மாவட்டத்தில் சனி யன்று துவங்கப்பட்ட  இச்சுற்றுலா பயணத்தில்  ஆழியார் அணை, குரங்கு அருவி, வால்பாறை பாலாஜி கோவில், சோலையாறு அணை, நல்லமுடி, பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு ஆகிய இடங்களுக்கு அழைத் துச் சென்று இரவுஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் முடிவடையும் வகை யில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற் கென கட்டணமாக ரூ.1155 நிர்ணயிக் கப்பட்டு, சுற்றுலா பயணியர் பதிவு துவங்கப்பட்டுள்ளது. அதுபோலவே, கோயம்புத்தூர் காந்திபுரத்தில் துவங்கி உதகை, பரளி்காடு  பகுதிகளுக்கு ஒருநாள் சுற் றுலாசெல்ல ரூ.1200ம்,கோவை வன அருங்காட்சியகம் அல்லது விவசாய பல்கலைகழகம், மருதமலை, கோவை குற்றாலம்,ஈஷா யோகா மையம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர்கோயில் போன்ற பகுதிக ளுக்கு ஒருநாள் சுற்றுலா செல்ல ரூ.800ம்,மலைவாழ் மக்களின் பாரம் பரிய உணவுடன் பவானி ஆற்று பரிசல் பயணம், சாகச நடைபயண மாக ஒருநாள் சுற்றுலா செல்ல ரூ. 850ம், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சுற்றுலாசெல்லும் அனைத்து பயணியருக்கும்,காலை சிற்றுண்டி, தேனீர், தின்பண்டம்,மதிய உணவும் இலவசமாகவழங்கப்படுகின்றது. மேலும், இந்தஒருநாள் சுற்றுலா தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவும், கூடுதல்  விபரங்க ளுக்கு 0422-2302176, 2302177, 2303176 மற்றும் 917699852 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்தஒருநாள் சுற்றுலா பய ணத்தின் மூலம் சுற்றுலா பயணியர் நம்மை சுற்றியுள்ள சுற்றுலா பகுதி களின் சிறப்பை அறியமுடிவதுடன், ஒருநாளை மகிழச்சியுடன் கழிக்கும் பொன்னான வாய்ப்பினையும் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வழங்கு கின்றது என அவர் தெரிவித்தார்.  முன்னதாக, உள்ளூர் சுற்றுலா பயணத்திட்டத்தின் முதல் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு மலர் கள் வழங்கி வாழ்த்தியதுடன், கொடி யசைத்தும் சுற்றுலா வாகனத்தினை மாவட்ட வன அலுவலர் தொடங்கி வைத்தார்.

ஒன்றிய அலுவலகத்திலிருந்து காசோலை திருட்டு: 3 பேர் கைது

இளம்பிள்ளை, டிச.14- சேலம் மாவட்டம், வீரபாண்டி  ஒன்றிய அலுவலகத்தில்  காசோ லையை திருடி அதிகாரி போல் கையெழுத்திட்டு பல லட்சம் ரூபாய்  சுருட்டும்  முயற்சியில் ஈடுபட்ட  3 பேர் கைது செய்யப்பட்டனர்.  சேலம் மாவட்டம், வீரபாண்டி  வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) திருவேரங்கன் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பையை அகற்றல், தனி நபர்  கழிப்பிட வசதிகள் உள்பட பல  திட்டங்களுக்கு பயனாளிகளுக்கு  காசோலை வழங்கப்பட்டு வரு கின்றது. இதற்காக அரசு தனியாக  வங்கி  காசோலை புத்தகம் (இந்தியன்  வங்கியின் கிளையில் வீரபாண்டி)  இருந்து வழங்கப்பட்டுள்ளது.  கடந்த நவம்பர் 26 ஆம் தேதி  இந்த காசோலை புத்தகத்திலிருந்து  5 காசோலைகளை காணவில்லை.  இது குறித்து திருவேரங்கன், வங்கி அலுவலர்களும் தகவல்  தெரி வித்து மேற்கண்ட 5 காசோலை களை  நிறுத்தி வைக்குமாறு வங்கி  அதிகாரியிடம்  கேட்டுக்கொண்டார். மேலும் ஆட்டையாம்பட்டி காவல்  நிலையத்தில் காசோலை காணாமல் போனது குறித்து  புகார் மனு அளித் தனர்.  இந்நிலையில் குருமூர்த்தி என்பவர் திருவாரூர் வங்கியில் செக்  லீப்களை  தனது கணக்கில் வரவு  வைக்க அளித்துள்ளார். இந்த  காசோலைகள் நிறுத்தி வைக்கப் பட்டது என அறிந்த வங்கி அதி காரிகள் வீரபாண்டி வங்கிக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து விசாரணையில்,  இதே அலுவல கத்தில் அம்மா சிமெண்ட் விற்பனை கிடங்கில் உதவியாளராக பணி புரியும்   இரும்பாலை சேர்ந்த தாசன்   மகன்  செல்வம்(39). இவரின் நண்ப ரான திருவாரூர் மாவட்டம், குட வாசல் பகுதியை  சேர்ந்த கோவிந்த ராஜ்  மகன் குருமூர்த்தி  (26) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த வடக்கு வேலி  பகுதியிலுள்ள ராஜாங்கம் மகன் செல்வம் (43), வேடசந்தூர் பகுதி யைச் சேர்ந்த மணி ஆகியோர்  இரண்டு காசோலைகளில் ரூ.19 லட்சம் வரவிற்காக வங்கியில் அளித்துள்ளது தெரியவந்தது .  இது குறித்து ஆட்டையாம் பட்டிகாவல் நிலைய ஆய்வாளர்  குண சேகரன், உதவி ஆய்வாளர்  தங்க வேல் மற்றும் போலீசார் மேற் கொண்ட  தீவிர விசாரணையில்  ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர் செல்வம் காசோலை களை திருடியது  தெரியவந்தது. இவர்  கொடுத்த தகவல்படி குருமூர்த்தி மற்றும் செல்வம் காசோலை வங்கி  கணக்கில் இருந்து திரும்பி வந்த  நிலையில், இதனை மாற்ற  வீர பாண்டி ஒன்றிய அலுவலகத்திற்கு  வந்தனர். இதனை கண்காணித்த  காவல்துறை போலீசார்  செல்வம்,  குருமூர்த்தி மற்றொரு செல்வம் மூவரையும் கைது செய்தனர். மேலும்  போலீசார் விசாரணையில்  ஊழியர்  செல்வம் அலுவலகத்திலிருந்து  காசோலைகளை எடுத்து அதி காரிகள் கையெழுத்திட்ட பிரதியை  நகல் எடுத்துள்ளதாக தெரிகிறது.  இதையடுத்து காசோலையில்  போலி கையெழுத்து போட்டு பணம்  எடுக்க  தனது  நண்பர்களை பயன் படுத்தியது தெரியவந்தது. ஆட்டை யாம்பட்டி காவல் நிலைய போலீசார்   மூவரையும் கைது செய்து சேலம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய  சிறையில் அடைத்தனர்.  மேலும் தலைமறைவான வேட சந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ப வரை போலீசார்  தேடி வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி னால் மேலும் பல மோசடி கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.