tamilnadu

கோவை, சேலம், தருமபுரி முக்கிய செய்திகள்

வரதட்சணை கொடுமை காவலர் கைது
கோவை. நவ.14- கோவையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை வெங்கிட்டாபுரம், கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா (23), பொள்ளாச்சி திப்பம்பட்டி, கண்ணப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் ஜெயக்குமார் (28). கோவையில் உள்ள 4 வது பட்டாளியனில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்தனாவும், ஜெயக்குமாரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார்.  இந்தநிலையில் ஜெயக்குமார் தொடர்ந்து கீர்த் தனாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீர்த்தனா கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
கோவை. நவ. 14- கோவை அருகே மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (21). இவருக்கு வியாழனன்று (நவ.14) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதை யொட்டி அவருடைய குடும்பத்தார் தங்களுடைய பூர்வீக சொத்தை விற்பனை செய்து திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர். ஆனால், இதற்கு மணப்பெண் சத்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் தாயாரிடம் சண்டை யிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதனன்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மணப்பெண் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் குறித்து சூலூர் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- காவல் துறையினர் தீவிர விசாரணை
சேலம், நவ.14- ஓமலூர் அருகே 6 வயது சிறுமியை மர்ம நபர்கள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த ஊ.மார மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிந்த சிறுமியை, சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் ரயில்வே தண்டவாளம் அருகே சில இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். இதன்பின் அச்சிறுமியை மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறுமி கூச்சலிடவே அருகிலுள்ளவர்கள் அங்கு வருவதை கண்ட சம்மந்தப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து சிறுமி பெற்றோர்களிடம் தெரி விக்கவே உடனடியாக தொளசம்பட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள் ளனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த தொளசம் பட்டி காவல்துறையினர் மற்றும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக்கொண்டும் சுதாட்டத்தில்  ஈடுபட்டும் வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் தான் இதுமாதிரியான சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடு பட்ட இளைஞர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

டெங்கு எதிர்ப்பு தின  விழிப்புணர்வு பேரணி
தருமபுரி, நவ.14- பாலக்கோடு அருகே டெங்கு எதிர்ப்பு தின விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் பெல் ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கோட்டூர், கரகூர் ஆகிய கிராமங்களில் டெங்கு எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி வியாழனன்று நடைபெற்றது. இப்பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர்கள் எம்.சிவகுரு, நவீன், சுகாதார மேற் பார்வையாளர் ஏ.சேகர், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்செல்வம், சண்முகம் ஆகியோர் கொசுக்கள் உற்பத்தியாகும் விதங்கள் குறித்தும், அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினர். இப் பேரணியில் தேங்கி நிற் கும் நீரை அகற்றுவோம். கொசுப் புழுக்களை அழிப்போம். கொசுக்களை ஒழிப்போம். டெங்குவை தடுப்போம் என முழக்கங் கள் எழுப்பப்பட்டன.