tamilnadu

img

கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்

பொள்ளாச்சி, ஜன. 2- பொள்ளாச்சி அடுத்த ரமணிமுதலிபுதூர் கிராமத்தில் கழிப்பிட வசதியை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ரமணிமுதலிபுதூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமம்  அதிமுக கட்சியின் வால்பாறை சட்டமன்ற உறுப்பி னர் கஸ்தூரி வாசுவின் சொந்த கிராமமா கும்.  இப்பகுதியில் இன்றளவும் பொதுக் கழிப்பிடம் இன்றி திறந்தவெளி கழிப்பிடத் தையே அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் அவல நிலை இன்னும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் இப்பகுதியல் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருவதால் ரமணிமுதலி புதூர் கிராமத்திற்கு முறையான கழிப்பிட வசதி அமைத்து தர அரசு முன்வர வேண்டு மென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;