tamilnadu

img

துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடுக

தருமபுரி, ஆக.6- துப்பரவு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை ரத்து செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழி லாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தருமபுரி நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப நிரந்தர துப்புரவு தொழி லாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் நகர்ப்பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. மேலும், பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கும் ஆளாகி வருகின்ற னர்.  அதேநேரம், தற்காலிகமாக நியமிக் கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் நகரை தூய்மைப்படுத்தும் பணியை மேற் கொண்டு வருகின்றனர். இவர்களை நிரந்த ரப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள் ளாமல் நகராட்சி  நிர்வாகம் துப்புரவு பணியை தனியாரிடம் தாரைவார்க்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர் வாகம் துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய  வேண்டும். தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தர பணி யாளர்களாக நியமிக்க வேண்டும். அர சாணை படி நாள் ஒன்றுக்கு ரூ.509 சம்பளம் வழங்க வேண்டும். நிரந்தர தன்மையுள்ள தொழிலில் காண்ட்ராக்ட் முறையை புகுத்தக்கூடாது. பி.எப்., தொகையை முறையாக செலுத்தி அதற்கான ரசீதை  தொழிலாளியிடம் வழங்கப்பட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று சிஐடியு  தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் தருமபுரி தொலைபேசி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கலாவதி தலைமை  வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. நாகராசன், மாவட்டத் தலைவர் ஜி.நாக ராஜன், உள்ளாட்சி தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வம் மற்றும் சி.குட்டியப்பன், எம்.ராஜேந்திரன், எம். வெங்கடேசன், எம்.சங்கர், மாதையன்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண் டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ஆர். வெங்கட்ராமன் நன்றி கூறினார்.