கோவை, அக். 12 – கோவை மாநகராட்சி தூய் மைப் பணியாளர்கள் நியமனத் தில் ஒப்பந்தப் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி யாற்றி வருகின்றனர். பத்தாண்டு களுக்கு மேலாக குறைந்த கூலி யில் தூய்மைப் பணியில் இத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். இவர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என சிஐடியு ஊரக வளர்ச்சி சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்களை நிரந் தரப் பணியில் அமர்த்த கோவை மாநகராட்சி அறிவிப்பை வெளி யிட்டது. இதனையடுத்து, இப்பணியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு முன்னுரிமை வழங்க வேண் டும் என கோரிக்கை முன்வைத் தது. ஆனால், கோவை மாநக ராட்சி நிர்வாகமோ அதனை ஏற்க மறுத்துவிட்டு, 321 பேருக்கு புதிய பணி நியமன ஆணையை வழங்கி யது. இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டதன் விளைவாக, மீதமுள்ள 228 நிரந்தர பணியிடங் களுக்கான பணி நியமனத்தை மாந கராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்தி ருந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் முன் னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மீதமுள்ள இடங் களில், பத்தாண்டுகளுக்கு மேலாக தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியம னம் செய்யப்படும் என உறுதிய ளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாநக ராட்சி மீண்டும் கடந்த 19 ஆம் தேதி 530 பேரை நியமனம் செய்ய விண் ணப்பங்களை கேட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆவேசமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார், நிர்வாகிகள் கணி, வீராச்சாமி ஆகியோர் மனு அளித்தனர். இதில், ஏற்கனவே இத்தொழிலாளர்கள் மாநகராட் சியால் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற் போதைய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இக்காலத்திலும் இதற்கு முந்தைய பேரிடர் காலத் திலும் இந்த தூய்மைப் பணியா ளர்கள் களப்பணியாற்றி வருகின் றனர். இத்தகைய ஒப்பந்த தூய் மைப் பணியாளர்களுக்கு தற் போதைய நியமனத்திலாவது முன் னுரிமை தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதேபோன்று குறைந்தபட்ச கூலி யாக ரூ.600 வழங்க வேண்டும் என் கிற கோரிக்கையையும் முன்வைத் தனர்.