tamilnadu

img

குடியுரிமையும், மத விஷமமும் - சிறப்பு கருத்தரங்கம்

பொள்ளாச்சி, டிச.20 – குடியுரிமையும் - மத விஷமமும் என்ற தலைப்பில் பொள்ளாச்சியில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் குடியுரிமையும் ,  மதவிஷமமும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு பொள்ளாச்சி பர்வானா அரங்கில் வெள்ளியன்று நடை பெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தபெதிக நகர கழகச் செய லாளர் பழ .அசோக் தலைமை வகித்தார். இதில் மத்திய  அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தித் தனையும்,  மாணவர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் கர்நாடக மாநிலத்தில் போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற பாஜகவின் கோர முகத்தின் அடக்கு முறைகள் குறித்தும் பேசினர். இந்த கருத்தரங்கில் பேராசிரியர் அ.கருணானந்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன்,  வெ.ஆறுச்சாமி, திமுக நிர்வாகி ந. கண்ணுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே,மகாலிங்கம், மதிமுக மாவட்ட செய லாளர் குகன்மில் செந்தில், நகர செயலாளர் துரைபாய்,  வழக்கறிஞர் ஷாநவாஷ், காங்கிரஸ் நகர செயலாளர் காளி முத்து, விசிக மாவட்ட செயலாளர் ச.பிரபு,  சிபிஐ வட்டார செயலாளர் வி.சண்முகம் , மமக மாவட்ட பொருளாளர் ஷேக்  அப்துல்லா,  ஆதித்தமிழர் பேரவை கோபால் உள்ளிட் டோர் பங்கேற்று பேசினர். முடிவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கழக வெளியீட்டுச் செயலாளர் இரா. மனோகரன் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் திரளா னோர் கலந்து கொண்டனர்.