மதுராந்தகம், ஆக.28- சமூக பாதுகாப்பு திட்டங்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் மது ராந்தகத்தில் நடைபெற்றது. சிஐடியுவின் 14-ஆவது மாநில மாநாடு காஞ்சி புரத்தில் செப்டம்பர் 19 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி மாவட்டம் முழுவதும் விளம்பரங்கள் செய்வது, சிறப்பு கருத்தரங்கங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ‘முறைசாரா தொழிலா ளர்களை வஞ்சிக்காதே, கேள்விக்குறியாகும் சமூக பாதுகாப்பு திட்டங்களை பாதுகாத்திடு’ என்ற தலைப்பில் மதுராந்தகம் பழைய வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.மாசிலா மணி தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.சிங்கார வேலு, மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் இ.கோவலன், சுமைப்பணிச் சங்க கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், உள்ளிட்ட பலர் பேசினர். மினி மாரத்தான் செப்டம்பர் 1ஆம் தேதி காஞ்சிபுரம் பெரியார் நகர் முதல் தேரடி வரையிலும் மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதை ஆட்சியர் பா.பொன்னையா துவக்கி வைக்கிறார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி, இயக்குநர் லெனின்பாரதி, பச்சையப்பா சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு களை வழங்குகிறார்கள்.