ஏற்காடு, செப்.18- சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வரும் (செப்.22) ஞாயிறன்று தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் மனுநீதி திட்ட முகாம் நடைபெறவுள்ளது. ஏற் காட்டில் 9 ஊராட்சிகளிலும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் ஏற்காடு அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் ஏற்காடு எம்.எல்.ஏ. சித்ரா கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக் கொள்ள உள்ளனர். மற்ற 8 ஊராட்சிகளுக்கான முகாம்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சிறப்பு அலுவ லர்கள் தலைமையில் நடைபெற உள்ளன. எனவே மக்கள் தங்களின் பிரச்சனைகள் மற்றும் பொதுப் பிரச்சனைகள் குறித்தும் மனுக்களை வழங்கி பயன் பெற வேண்டும் என ஏற்காடு வட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார். இதுகுறித்து ஏற்காடு பகுதியில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப் பட்டன.