tamilnadu

img

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கோவை, மே 27-கோவை மீன் மார்க்கெட்டில் பெண்ணிடமிருந்து சங்கிலி பறித்து சென்ற கொள்ளையனை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மீன்கள் வாங்க வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறன்று ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் ரஞ்சிதம் என்பவர் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரில்வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்துசங்கிலியை திடீரென பறித்து தப்பியோடினார்.இந்தகாட்சிகள் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில்பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் பெரிய கடைவீதி காவல் துறையினர் கொள்ளையனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.