tamilnadu

திருப்பூர், நீலகிரி, நாமக்கல்லில் மருத்துவக் கல்லூரி மத்திய அரசு ஒப்புதல்

திருப்பூர், அக். 23 - திருப்பூர் மாவட்டம் உள்பட ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித் துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் மாநில அரசுக்கு அக். 23ஆம்  தேதி புதன்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள  அரசு மருத்துவமனைகளுடன் இணைந்ததாக மருத்துவக்  கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி யும் தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.195 கோடி (60 சத விகிதம்), மாநில அரசின் பங்குத் தொகை ரூ.130 கோடி  (40 சதவிகிதம்) என்ற அளவில் செலவிடப்பட்டு மருத்துவக்  கல்லூரி அமைக்கப்படும்.  இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி அமைப்ப தற்கு புரிந்துணர்வு ஒப்பந்த நகலை கூடிய விரைவில் மத்திய  அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைக்கும்படியும் இந்த  ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்ட மக்களின் 10 ஆண்டுகாலக் கோரிக்கை  நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கும் நிலையில் மாநில அரசு உடனடியாக இதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.  ஏற்கெனவே தொழிலாளர் நகரமான திருப்பூரில் இஎஸ்ஐ  மருத்துவமனை அமைப்பதாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையை கட்டி பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று திருப்பூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.