உடுமலை, ஆக. 28- உடுமலை நகர் முழுவதும் மிகவும் மோசமாக இருக்கும் சுகாதாரச் சீர் கேட்டை சரி செய்ய நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாயன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு பிரச் சாரம் நடைபெற்றது. உடுமலை நகரில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் முறையாக செயல்படுத்தாமல் போன பாதாள சாக்கடை திட்டத்தால் சாக்கடை கழிவுநீர் வீதிகளில் செல்வதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக செயல் படாத சாக்கடை திட்டத்திற்கு அதிக கட்ட ணம் வசூலிப்பதை தடுத்து, குறைந்த கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடுமலை நகராட்சி நிர்வாகம் நடைமுறை படுத்த வேண் டும் என்று செவ்வாயன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு பிரச்சாரம் நடை பெற்றது. இப்பிரச்சாரத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம். ரவி தலைமை வகித்தார். இதில் உடுமலை தாலுகா செயலாளர் ரண தேவ், வி. செளந்தராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.