tamilnadu

img

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்க

அவிநாசி, ஜூன் 30- புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க பேரவை கூட்டம் அவிநாசியில் சனியன்று நடைபெற்றது. இந்த பேரவைக் கூட்டத்திற்கு வட்டக்கிளைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ் நாடு ஓய்வுபெற்ற சத்து ணவு, அங்கன்வாடி ஊழியர் சங்க வட்டக் கிளைத் தலைவர் நாகராஜ், மாவட்ட இணைச் செயலாளர் நடராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  ஜன 2016ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு  செப்.30 வரை  21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட இணைச் செயலாளர் மாயன்குட்டி,  வட்டக்கிளை செயலாளர் சாமிநாதன், இணைச் செயலாளர் விஜய லட்சுமி, பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.