tamilnadu

ஏபிடி நிறுவனத்தில் போனஸ் உடன்பாடு

கோவை, அக்.18 ஏபிடி நிறுவனத்தில் 2018- 19 ஆம் ஆண்டிற்கான போனஸ் உடன்பாடு வெள்ளியன்று எட்டப்பட்டது. கோவையை தலைமையிடமாக கொண்டு ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1,300  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஸ்ட்டிரா உள்ளிட்ட மாநி லங்களிலும் உள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2018 - 2019 ஆண்டிற்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களி டையே நடைபெற்று வந்தது. கோவை பந்தய சாலையில் உள்ள ஏபிடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் 13 சதவிகிதம் அளிப்பது எனவும், இதனை இரண்டு தவணையாக வழங்குவது எனவும், முதல் தவணை அக்.22 ஆம் தேதியும், இரண்டாவது தவணை பொங்கல் பண்டிகைக்கு முன்பும் வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், நிர்வாகத் தரப்பில் முதன்மை நிர்வாகி என்.சண் முகசுந்தரம், முதன்மை மேலாளர் ஆர்.சண் முகநாதன், மனிதவளமேம்பாட்டு அதிகாரி பி.கிருஷ்ணமூர்த்தி, நிதி மேலாளர் சண்மு கம் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் சிஐடியு சார்பில் ஏபிடி சங்கத்தின் கௌரவ தலைவர் எஸ்.ஆறுமுகம், பொதுச்செய லாளர் எம்.அருணாச்சலம், பொருளாளர் தமிழ்செல்வன் ஆகியோரும், ஐஎன்டியுசி சார்பில் பொதுச்செயலாளர் கே.என்.சண்முகசுந்தரம், பொருளாளர் ஜெயக் குமார் உள்ளிட்ட தொழிற்சங்க தலை வர்கள் பங்கேற்றனர்.