tamilnadu

img

ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி

சேலம், ஜூன் 15- ரத்த தான தினத்தை முன்னிட்டு சேலத்தில் விழிப்பு ணர்வுப் பேரணி நடைபெற்றது. விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம் ஆகியன இணைந்து ரத்த தானம்,  உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி  நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் கொடியசைத்து தொடக்கி  வைத்தார். பேரணி அரசு  கலைக் கல்லூரி, காந்தி சாலை வழியாகச் சென்று  அஸ்தம்பட்டியில் முடிவடைந்தது.  பேரணியில் ஏராளமான மாணவர்கள் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை  விநியோகித்தனர்.  இப்பேரணியில் பல்கலை.  துணை வேந்தர் சுதிர், பதிவா ளர் மருத்துவர் ஜெயகர், விம்ஸ்  மருத்துவமனையின்  மருத்துவ இயக்குநர் மீனாட்சிசுந்தரம், பல்கலை. தர மேம்பாட்டு இயக்குநர் ஞானசேகர், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம்,  மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.