கோவை, டிச. 7 – கோவையில் கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி ஊர்வலமாக பாடல் கள் பாடிச்சென்ற கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், கோவை யில் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வு கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக கோவை வேலாண் டிபாளையம் பகுதியில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியபடி “கேரல்” குழுவினர் சென்று கொண்டு இருந்தனர். அப் போது, பாடல் பாடியபடி செல்வதற்கு அப் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். மேலும், கேரல் கூட்டத்தை நடத்தி வந்த ஜெபகுமார் என்பவரை பிர காஷ் கடுமையாக தாக்கி, கொலை மிரட் டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெபகுமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜக மாவட்ட இளை ஞர் அணி செயலாளர் பிரகாஷை சாய் பாபா காலனி போலீசார் கைது செய்த னர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.