மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா கமிட்டி உறுப்பினரும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க பவானி தாலுகா தலைவருமாக செயல்பட்டு வந்த தோழர் டி. ரமணி (எ) ரவீந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், ஞாயிறன்று அவரது இல்லத்திற்கு சென்று அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளையும் சந்தித்து இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.