அரூர் சார் ஆட்சியர் அறிவிப்பு
தருமபுரி, நவ. 18 - பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங் கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல்களை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், சார் ஆட்சியர் மு.பிர தாப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட் டத்தில் சார் ஆட்சியர் மு.பிரதாப் பேசியதாவது, பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட் டத்தில், அரூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பெறுவதற்கான தகுதியான பயனாளிகள் பெயர் பட்டியல் இதுநாள் வரையிலும் முழுமையாக வந்துசேரவில்லை. இதனால், ஏழை, எளிய மக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் சென்று சேருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் பாரத பிரதமரின் வீடு கள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியலை விரைந்து தேர்வு செய்ய வேண்டும். தற்போது, உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதால், வாக்குச் சாவடிகளில் மின் விளக்கு வசதிகள், கழிப்பிட வசதிகள், மாற்றுத்திற னாளிகள் சென்று வருவதற்கான சாய்வு தள நடை மேடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பதற்றமான வாக்குச் சாவ டிகள், சமூக மோதல்கள் ஏற்படும் பகுதிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த புள்ளி விவரங்களை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலு வலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.