tamilnadu

img

குறுந்தொழில் முனைவோருக்கு கடன் தருவதில் வங்கிகள் தயக்கம்

தொழில்துறை ஆணையரிடம் டேக்ட் சங்கம் புகார்

கோவை, நவ.15- குறுந்தொழில் முனைவோர் கள் நடப்பு கணக்குகளை சரி யாக பராமரித்து வந்தாலும் கடன் தர வங்கிகள் தயக்கம் காட்டுவ தாக கோவை வந்த தொழில் துறை ஆணையர் அனுராஜியி டம் டேக்ட் தொழில் அமைப்பு  சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் (டேக்ட்) சங்கத்தின் சார்பில் இதன் தலைவர் ஜேம்ஸ், பொது செயலாளர் பிரதாப்சேகர் துணை தலைவர்கள் சண்முகசுந்தரம், சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகி கள் அளித்த மனுவில் தெரிவித் துள்ளதாவது, கோவை மாவட் டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற் பட்ட குறுந்தொழில் முனை வோர்கள் உள்ளார்கள். அவர்களால் ஒரு சொந்த இடம் வாங்கி தொழிற்சாலை கட்டுவதற்கு வழி இல்லாமல் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வருகிறார்கள். அரசு தனி கவனம் எடுத்து சிட்கோ மூலம் அடுக்குமாடி தொழில் கூடங் களை கட்டி குறுந்தொழில் பேட்டைகளை மாவட்ட முழு வதும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் குறுந்தொழில் முனைவோர்க ளுக்கு கடன் வழங்குவதில் தயக் கம் காட்டுகிறது. வரவு செலவு கள் சரியாக செய்து இருந்தாலும் நடப்பு மூலதனம் கடன் தர மறுத்து வருகிறார்கள். இதுகுறித்து அரசு தலை யிட்டு குறுந்தொழில் முனை வோர்களுக்காக தனி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுந்தொழில் முனை வோர்களில் பெரும் பகுதியினர் வங்கி கடன் கிடைக்காததால் தனியாரிடமோ, சொந்தங்க ளிடமோ கடன்களை வாங்கி இயந்திரம் வாங்குபவர்களுக்கு மானியம் பெற மூன்று தவணை யாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் காத்து இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதை மாற்றி ஒரே தவணை யில் மானியம் வழங்கிட நடவ டிகை எடுக்க வேண்டும். தமிழ கத்தில் இயங்கிவரும் கார்ப்ப ரெட் நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் கட்டாய மாக 50 சதவிகிதம் ஆர்டர் களை தமிழ்நாட்டில் கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர்.