tamilnadu

img

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

தருமபுரி, ஜூலை 21- நல்லம் பள்ளி வட்டம், கெட்டு அள்ளிகிராமத்தில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டம்,  கெட்டு அள்ளி, இராமர் கூடல் ஆகிய  கிராமத்தில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்  தூய்மை பாரதம் திட்டம் கீழ் பிளாஸ்டிக் இல்லா கிராமமாக மாற்ற கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றினர். வீடுவீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில், அம்பேத்கர் இளைஞர் நற்பணி இயக்க தலைவர் பரமேஷ், செயலாளர் ஆனந்தசெல்வம், பொருளாளர் திருமலேஷ் மற்றும் மன்ற உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.