tamilnadu

அரசால் முடக்கம் செய்யப்பட்ட அசையும் சொத்துக்கள் ஏலம்

கோவை, பிப்.17- தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், பிரிவு-3 ன்படி, அரசால் முடக்கம் செய்யப்பட்ட அசையும் சொத்துக்கள் தகுதிபெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படவுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கைப்பற்றப்பட்ட தி/வா.வெல்டெக்ஸ் மற்றும் தி/வா.கேயெஸ் மெர்கண் டைல் நிதி நிறுவன நான்கு சக்கர வாகனங்கள், போர்டு பியஸ்டா மற்றும் இன்டிகா விஸ்டா ஆகியவை கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பிப். 25 ஆம் தேதி யன்று முற்பகல் 11.30 மணியளவில் ஏலம் விடப்பட வுள்ளது. மேற்படி சொத்துக்கள் மற்றும் ஏல நிபந்தனை விபரத்தினை கோவை வடக்கு வட்டாட்சியர் அவ லகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.