tamilnadu

img

கோவை கனரா வங்கி மேலாளர் மீது தாக்குதல் இந்திய வங்கி ஊழியர் சங்கம் கண்டனம்

கோவை, டிச. 5–  கோவையில் கனரா வங்கி மேலாளர் மீது தொழிலதிபர் ஒருவர் தாக்குதல் நடத்திய  சம்பவத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சங் கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை சோமயம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த வெற்றிவேலன் என்பவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, ஒரு கோடி ரூபாய்  கடன் பெறுவதற்காக  கோவை திருச்சி சாலையில் உள்ள கனரா  வங்கியில் இடைத்தரகர் மூலம்  விண்ணப் பித்துள்ளார். இந்தநிலையில் ஒன்பது மாதம்  ஆகியும் தனது கடன் தொடர்பாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் ஆத்திர முற்ற வெற்றிவேலன் செவ்வாயன்று வங்கி மேலாளர் சந்திரசேகர் மற்றும் இடைத்தர கர்கள் இருவரையும் கடுமையாக தாக்கி யுள்ளார். இச்சம்பவம் கோவையில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர் பாக இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஆர்.மகேஸ்வரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, வங்கியில் உள்ள பணம் முழுவதும் மக்களின் சேமிப்பு பணமாகும். இதனை கடன் கொடுக்கும் வங்கிகள் கடன் கேட்ப வர் தகுதி உள்ளவரா, கடனை திருப்பி செலுத்த இவருக்கு தகுதி உண்டா என்ப தெல்லாம் ஆராய்ந்த பிறகே கடன் கொடுப் பர். அந்த வகையில் திருச்சி சாலை கனரா வங்கி கிளையில் கடன் கேட்டு விண்ணப் பித்தவர், ஏற்கனவே ஆந்திரா வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே வங்கியில் கடன் வழங்க தயங்கியுள்ளனர்.  இந்நிலையில் இடைதரகரிடம் பணம் கொடுத்து ஏமந்ததற்கு வங்கி  நிர்வாகத்தின் மீது ஆத்திரம் கொள்ள எந்த வகையிலும் நியாயம் இல்லை. தொழிலதிபரின் இச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் இனி வேறெங்கும் நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதேநேரம் தனியார் வங்கிகள் கடன் பெறுவதறு கும், வசூலிப்பதற்கும் ஏஜென்சிகளை நிய மித்துள்ளது. அதேபோல் தற்போது அரசு பொதுத்துறை வங்கிகளும் கடனை வசூ லிக்க தனியார் ஏஜென்சிகளை நியமிது துள்ளது.  இது ஆபத்தான போக்காகும். இத் தகைய நிலையின் காரணமாகத்தான் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங் கேறுகிறது. ஆகவே வங்கி நிர்வாகங்கள் இதுபோன்ற தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.