கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்
கோவை, நவ.7 – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணை யாளர் அலுவலகத்தில் வியாழனன்று மனு அளித்தனர். தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி ஆடை அணிவித்தது அவமரி யாதை செய்தார். இவ்வாறு சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அர்ஜுன் சம்பத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி வியாழனன்று திரா விடர் தமிழர் கட்சியின் தலைவர் வழக்க றிஞர் வெண்மணி தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத் தில் மனு அளிக்கப்பட்டது.