நாமக்கல், ஆக. 27- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் திற்குள் பயன்பாடற்ற நிலை யிலுள்ள மாற்றுத் திறனாளி களுக்கான பேட்டரி வாகனத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் திரளாக வந்திருந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். இதேபோல், உதவித்தொகை, உதவிப் பொருட்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான உரிய நடவடிக்கையை எதிர்பார்த்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இச்சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்க ளுக்கு அழைத்து செல்ல கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அவை தற்போது பழுதடைந்ததன் காரணமாக ஓராண்டு காலமாக பயன் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் மாற்றுத்திறனா ளிகள் மிகவும் சிரமப்பட்டு சாலையை கடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ச.சீனிவாசன் கூறியதாவது, மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வருகை தந்து அவர்களது பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளை சந்திக்க வரும் பொழுது அவர்களுக்கான உரிய பாதுகாப்பை உத்தரவாதப்ப டுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் உள்ள பழுதடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வாகனத்தை உடனடியாக சரி செய்திட வேண்டும். இதனை சரி செய்யும் வரை அவர்களை அழைத்து வருவதற்கான உரிய ஏற்பாடுகளையாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிக ளின் நல அலுவலர் க.ஜெக தீசன் கூறியதாவது, பழுத டைந்த வாகனத்தை சரி செய்வதற்காக தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்டுள்ளோம். அடுத்த சில மாதங்களில் இதனை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.