தேசிய மாணவர் படை முகாமில் கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இம்மாணவர்களுக்கான பாராட்டு விழா புதனன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களை பள்ளியின் தாளாளர் அருட்பணி ஏ.ததேயு பால்ராஜ் பரிசு வழங்கி கௌரவித்தார்.